நேற்று (04) முதல் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வனவிலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு வலயங்களுக்குள் பிரவேசிப்பது அல்லது மலைகளில் முகாமிடுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் செயலாளர் தலைமையில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் வனஜீவராசிகள் திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான நுவரெலியா மாவட்ட வனபகுதிகளில் உட்பிரவேசிக்க முன் உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்