குருநாகலை – கும்புகெடே பகுதியில் பேருந்தொன்றில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தரம் பதினொன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவி, பாடசாலை விட்டு வீட்டுக்குச் செல்லும் போது கும்புகெடே பகுதியில் வைத்து பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில், அந்த பேருந்தின் சாரதி, நடத்துனர், மற்றும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குறித்த மாணவி குருநாகலை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.