மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது.

மட்டகளப்பு- காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் போதைப்பொருளுடன் இரு வியாபாரிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று முன்தினம் (14) இடம்பெற்றுள்ளது. மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவதினமான நேற்று முன்னிரவு பூநொச்சிமுனை பகுதி வீதியில் பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அங்கு வீதியில்  காத்தான்குடியைச் சேர்ந்த வியாபரியிடம் மாமாங்கத்தில் இருந்து மோட்டர் சைக்கிளில் சென்ற இருவரும் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை அவதானித்த பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர். 

மேலும், மாமாங்கத்தைச் சேர்ந்த 39 வயதுடைய வியாபரியிடமிருந்து 5 கிராம் 250 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்டதுடன், காத்தான்குடியைச் சேர்ந்த 40 வயதுடைய வியாபாரியிடமிருந்து 150 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளையும், சட்டவிரோத வியாபாரத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *