ஓய்வுபெற்ற ஆசிரியர் சுட்டுப் படுகொலை!

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இச்சம்பவம் அனுராதபுரம் – இராஜாங்கனை பிரதேசத்தில் நேற்று முன்தினம் (13) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான 62 வயதுடைய எம்.ரி. மாரப்பன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் என்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக இராஜாங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *