8ஆவது நாளாக தொடரும் தீவிர போர்: அச்சத்தில் தப்பி ஓடும் மக்கள்!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே  எழுந்துள்ள போரானது 8 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது. 

இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்பதால் சைரன் எச்சரிக்கை ஒலிக்கப்பட்டதும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி ஓட்டம் பிடித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, காசா நகரின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதல்களில் இதுவரை 447 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் கொடூரமாக கொல்லப்பட்ட மக்கள் பற்றி ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவல்களிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, இந்த தாக்குதலில் உயிரிழந்த 1,417 பேரில் 447 குழந்தைகள் மற்றும் 248 பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, காசாவின் வடக்கு பகுதியில் இருந்து பொதுமக்கள் அனைவரும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலின் இந்த அறிவிப்புக்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

சுமார் 11 லட்சம் பேர் வாழும் வடக்கு காசா பகுதியில் இருந்து 24 மணி நேரத்திற்குள் அனைவரும் வெளியேறுவது சாத்தியமில்லாதது எனவும், இதனால் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் ஐ.நா. எச்சரித்துள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படக் கூடும் என்பதால் சைரன் எச்சரிக்கை ஒலிக்கப்பட்டதும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி ஓட்டம் பிடித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *