பமுனுகம – பழைய அம்பலம கடற்கரையில் துண்டிக்கப்பட்ட மனிதத் தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மனிதத் தலை நேற்று (12.10.2023) மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தலை அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த மனிதத் தலை தொடர்பில் நீதிவான் விசாரணை நடத்தப்படவுள்ளது.
மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.