கிங் கங்கை மற்றும் நில்வலா ஆற்றுப்படுகைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நில்வலா ஆற்றுப்படுகையில் பெய்து வரும் மழையினால் அக்குரஸ்ஸ, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் கம்புருபிட்டிய ஆகிய ஆற்றுப்படுகையின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் மீண்டும் அதிகரிக்கலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், ஜிங் கங்கைப் பிரதேசத்தில் வெள்ளம் குறைந்துள்ள போதிலும், சில பிரதேசங்கள் மேலும் வெள்ள அபாயங்களை எதிர்நோக்கக்கூடும் என்பதால், அந்த பகுதிகளில் உள்ள பக்க வீதிகளில் பயணிக்கும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு திணைக்களம் மேலும் கோரியுள்ளது.