நாட்டில் மீண்டும் நடைமுறைக்கு வரவிருக்கும் QR முறை!

கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த எரிபொருள் QR முறைமை மீண்டும் நடைமுறை படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உத்தர லங்கா கூட்டமைப்பினரின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இலங்கையில் எரிபொருளின் விலை மேலும் உயரும் என  நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதேவேளை பொருட்களின் விலையும் பாரிய அளவில் உயர்வடையலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருப்பதே இதற்கு ஒரே பதில் எனவும் மீண்டும் எரிபொருள் QR முறைக்கு செல்ல வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், உலகில் நிலவும் யுத்த சூழல், எதிர்வரும் குளிர்கால காலநிலை, எரிபொருள் போக்குவரத்திற்காக அறவிடப்படும் காப்புறுதி கட்டண அதிகரிப்பு, எரிபொருள் விநியோகம் குறைவடைந்தமை போன்ற காரணங்களால் எரிபொருள் விலை உயரும் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *