சாதாரண பரிட்சை முடிவுகள் வெளியாக உள்ளதாக சமூக வலைத்தளங்களின் ஊடாக பல்வேறு பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
அக்டோபர் மாதத்தில் ஒரு குறித்த தினத்தில் பரீட்சை முடிவுகள் வெளியாக உள்ளது என பரீட்சைகள் திணைக்களம் /கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிக்கை வெளியிடவில்லை.
பெரும்பாலும் சாதாரண தர பரீட்சை முடிவுகள் அக்டோபர் மாதத்தின் இறுதிப் பகுதியில் அல்லது நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் வெளியாகலாம் என நம்பப்படுகிறது.
குறித்த பரீட்சை முடிவுகளை மிகவும் விரைவாக வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.எனவே சமூக ஊடகங்களில் பரவும் போலியான செய்திகளை நம்ப வேண்டாம்.