தந்தையுடன் தகராறு: 16 வயது மாணவனின் தவறான முடிவு!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் தனது தவறான முடிவால் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இச்சம்பவம் நேற்றைய தினம் (08) இடம்பெற்றுள்ளது   
யாழ். மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும், கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் சங்கீர்த்தன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவன் நேற்றுமுன்தினம் (07) கோயிலுக்கு சென்றுவிட்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவனுக்கும் தந்தைக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் நித்திரைக்கு சென்றனர். அதன்பின்னர் நேற்று காலை 6.30 மணிக்கு பெற்றோர், மகனை காணாது தேடியுள்ளனர்.

இந்நிலையில் வீட்டின் பின்புறம் இருந்த மரம் ஒன்றில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயமா பிறேம்குமார் மேற்கொண்டார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *