ஹொரணை, பல்லாபிட்டிய பிரதேசத்தில் இரண்டு தனியார் பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹொரண தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நடந்த அதே நேரத்தில் விபத்தை ஏற்படுத்திய பஸ் சாரதி ஒருவரை பயணிகளும் பிரதேச மக்களும் தாக்கியதையடுத்து பொலிஸார் தலையிட்டு சாரதியை பெரும் பிரயத்தனத்தின் பின்னர் மீட்டு கைது செய்துள்ளனர்.
இந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பஸ்ஸில் பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட போட்டித்தன்மையே காரணம் என கூறப்படுகிறது.