திருகோணமலையில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு!

தோப்பூரில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை-தோப்பூர் அல்லைநகர் 06 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கிலுர்தீன் அம்ஹர் எனும் 16 வயதுடைய சிறுவனே நேற்று(08) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்று வந்தவர் எனவும் சம்பவ தினத்தன்று வீட்டில் மின் குமிழ் ஒன்றினை திருத்திக் கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதாகவும் சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *