மலேசிய வௌிவிவகார அமைச்சர் சம்ப்ரி அப்துல் காதிர் (Zambry Abdul Kadir) உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (08) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வௌிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
நாளை(09) கொழும்பில் நடைபெறவுள்ள இந்து சமுத்திர வலய நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் சம்ப்ரி அப்துல் காதிர் கலந்துகொள்ளவுள்ளார்.
அதன்படி, இலங்கைக்கு இன்றைய தினம் வரவுள்ள மலேசிய வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான இராஜதந்திரிகள் குழாம் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.