தவறான முடிவெடுத்த இளைஞர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் பதிவாகியுள்ளது.
குறித்த இச்சம்பவத்தில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் வயலுக்கு பயன்படுத்தப்படும் நஞ்சு மருந்தை அருந்திய நிலையில் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் நேற்று(07) மதியம் உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு சிகிச்சை பலனின்றி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்