பேனா வடிவில் ஆபத்து: மாணவர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் தற்போது பாடசாலை மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் நிலை அதிகரித்துள்ளதுடன் இவ்வாறு மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் செயற்பாட்டுடன் தொடர்புடைய போதைப்பொருள் வியாபாரிகள் அதிகரித்து வருவதாகவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் வியாபாரிகள், போதைப்பொருள் அடங்கிய கார்பன் பேனாவை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களை போதைக்கு அடிமையாக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாதாரணமாக, இது ஒரு பேனாவை போல தோற்றம் கொண்டிருந்தாலும், அதை ஆராயும் போது அதில் போதைப்பொருள் சிகரெட் மறைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் பாவனையானது தற்போது பாடசாலை மாணவர்கள் மத்தியில் மிகவும் அதிகமாக காணப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 4ஆம் திகதி காலியை அண்மித்த பகுதியிலுள்ள பயிற்சி வகுப்பொன்றில் இவ்வாறான பேனா ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் மாணவர்களின் செயற்பாடுகள் குறித்து பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *