எல்ல-வெல்லவாய பகுதியில் கோர விபத்து : ஒருவர் பலி!

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று காலை (07) இராவண எல்ல பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டி ஒன்றும் – பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 70 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர்.

முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *