கொழும்பை மையப்படுத்தி வெடிகுண்டு தாக்குதல் அச்சுறுத்தல்: பாதுகாப்பை பலப்படுத்த வலியுறுத்தல்!

கொழும்பில் அண்மையில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் இடம்பெறுமென அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (06.10.2023) அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் விரைவில் வெடிகுண்டுத் தாக்குதல்கள் இடம்பெறும் என ஐ.எஸ்.ஐ.எஸ் அச்சுறுத்தல் விடுத்துள்ளமை குறித்து ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தியை சுட்டிக்காட்டியுள்ளதோடு அவ்வாறான அழிவுகள் ஏற்படாதவாறு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்.

அத்துடன் பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக பொது பாதுகாப்புத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து, சபையில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *