வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் விழுந்த பாரவூர்தி!

 நுவரெலியா காவல்துறை பிரிவிற்குட்பட்ட பதுளை நுவரெலியா பிரதான வீதியில் ஹஹ்கல பகுதியில் பாரவூர்தி ஓன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் விழுந்து  விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (06) இடம்பெற்றுள்ளதோடு பாரவூர்தியின் சாரதி காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில் பதுளை நுவரெலியா பிரதான வீதியின் வளைவு பகுதி ஒன்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதோடு விபத்துக்குள்ளான பாரவூர்தி பலத்த சேதமடைந்துள்ளதாக  தெரியவந்துள்ளது.

நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாக்கியதோடு குறித்த பகுதியில் பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *