கொழும்பில் மற்றுமொரு பேருந்து விபத்து : 22 பேர் படுகாயம்!

கொழும்பில் தனியார் பேருந்து மற்றும் கொள்கலன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு பிரதான வீதியில் கஜுகம பிரதேசத்தில் இன்று (06.10.2023) அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து  இடம்பெற்றுள்ளது.

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் கொழும்பில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த கொள்கலனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து இடம்பெற்ற அதேநேரம் பேருந்தின் பின்னால் வந்த எரிபொருள் பவுசரும் பேருந்துடன் மோதியது. இந்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதுடன் 4 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *