கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (07) நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை (07) கொழும்பு 11,12,13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு மாலை 5.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (08) காலை 8.00 மணி வரை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அம்பத்தல நீர் வழங்கல் மேம்பாட்டு பாதுகாப்புத் திட்டத்தினால் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.