பாடசாலை விடுமுறையில் டிசம்பர் மாதத்திற்கு மாற்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற ஒன்றுகூடலில் உயர்தரப் பரீட்சை தொடர்பில் கருத்துக்களை முன்வைத்து உரையாற்றும் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உயர்தரப் பரீட்சை ஜனவரியில் நடைபெறுவதால் டிசம்பர் மாத பாடசாலை தவணை விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பாடசாலை தவணை விடுமுறை டிசம்பர் 22ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாடசாலை விடுமுறை டிசம்பர் 22ஆம் திகதியளவில் வழங்கப்படுவதுடன் ஆரம்ப பிரிவுகள் ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
உயர்தர பரீட்சை முடிவடைந்த பின்னர் மற்றைய பாடசாலைகள் ஆரம்பிக்கப்படலாம். மேலும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.