போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது: மேலதிக விசாரணையில் பொலிஸார்!

பேசாலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட காட்டாஸ்பத்திரி கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதியுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை பேசாலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (04.10.2023) இடம்பெற்றுள்ளது.

மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் குறித்த வீட்டிற்குச் சென்று சோதனையை முன்னெடுத்தனர்.
இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கேரள கஞ்சா பொதியை மீட்டனர்.

இதன்போது சுமார் 2 கிலோ 300 கிராம் கேரள கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளதுடன்
குறித்த வீட்டில் இருந்த 44 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதி மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பேசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *