உடப்பு கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் கரையொதுங்கியுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பள்ளிவாசல்பாடு பிரதேச கடற்றொழிலாளர்கள் நேற்று முன்தினம் (03.10.2023) கடற்றொழில் நடவடிக்கைகளுக்காகச் சென்றபோது அப்பகுதியில் சடலம் ஒன்று கரையொதுங்கி கிடப்பதை அவதானித்தனர். பின்னர் சடலம் தொடர்பில் கடற்றொழிலாளர்கள் உடனடியாக உடப்புப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த உடப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது சடலத்தின் முகம், கை, கால் மற்றும் தலைப் பகுதிகள் முழுமையாக உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், பெண்ணின் சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்வாறு சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் கூறினர்.
குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காகப் புத்தளம் தள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்