2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நாளை மறுதினம் முடிவடைகிறது.
இந்நிலையில் மாணவர்கள் தமது விண்ணப்பங்களை இணையத்தளத்தில் அனுப்பி வைக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
குறித்த விண்ணப்பங்கள் 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே ஏற்றுக்கொள்ளப்படும்.