மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவர் கைது!

குருநாகல், வெல்லவ, மரலுவாவ பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளார்.
இக்கொலைச் சம்பவம் நேற்று(02) காலை இடம்பெற்றுள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண் குருநாகல், மரலுவாவ பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்தக் குற்றத்தைச் செய்த சந்தேக நபர் 02 நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியதாகவும், சம்பவ தினம் குறித்த பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் மனைவியை கத்தியால் குத்தியுள்ளார்.

இந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொலையை செய்த சந்தேகநபரான கணவர் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர் நீதிமன்றத்தால் சிறை அதிகாரியின் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *