தாய்க்கு ஏற்பட்ட அவலநிலை : விபரீத முடிவால் ஏற்பட்ட விபரீதம்!

யாழ்ப்பாணம் – ஆனைப்பந்தி பகுதியில் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தனது தவறான முடிவால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இச்சம்பவம் நேற்று (02.10.2023) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ். ஆனைப்பந்தியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண்ணுக்கு திருமணமாகி எழு ஆண்டுகளின் பின்னர் சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது இந்நிலையில் தனக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை என குறித்த பெண் வேதனையில் தவித்துள்ளார்

அக் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில், தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற வேதனையால் பெரும் மன அழுத்தத்தில் குறித்த பெண் இருந்துள்ளாரெனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே அவர் நேற்று தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வின்சன் தயான் அன்ரலா மேற்கோண்டுள்ளார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *