முல்லைத்தீவில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் தவறான முடிவு!

முல்லைத்தீவில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இச்சம்பவத்தில் நேற்றையதினம் (02) முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்தில் நிர்வாக பிரிவில் கடமை புரியும் அம்பாறையை சேர்ந்த 35 வயதுடைய இராமநாதன் சத்தியநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கென புதிதாக கட்டப்பட்டு கொண்டிருக்கும் கட்டட வளாகத்திலுள்ள குளியல் அறையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் இறப்புக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்டாத நிலையில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *