திருகோணமலை – துறைமுகப் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட கிறீன் வீதியில் நேற்று காலை பரிசு கொடுக்க வந்துள்ளதாக கூறி வீட்டுக்குள் வந்த வாலிபர் ஒருவர் வீட்டில் இருந்த முதாட்டியிடம் இருந்து ஐந்து பவுண் தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்றுள்ளதாக துறைமுகப்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலக்கத்தகடு இல்லாத இருசக்கரவாகனத்தில் வந்த ஒரு இளைஞரால் குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றதாக துறைமுகப்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகநபரை துரத்திச்சென்ற ஒருவரின் தகவலின் அடிப்படையில் தேடுதல் நடைபெறுவதாக துறைமுகப்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.