மட்டக்களப்பு ஏறாவூரில் வயோதிப பெண்ணிடம் கொள்ளையடித்து தப்பியோடிய நபர்!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாந்துறை பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவரை தாக்கி அவர் கழுத்தில் இருந்த 10 பவுண் பெறுமதியான தங்க ஆபரணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றைதினம் (02) இடம்பெற்றுள்ளதுடன் இச்சம்பவத்தில் 67 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனிமையில் இருந்த குறித்த பெண்ணின் வீட்டினுள் உட்புகுந்து அவருடன் உரையாடிவிட்டு பின்னர் அவரை வெளியே அழைத்து வந்து கூரிய ஆயுதத்தால் தாக்கி 10 பவுண் கொண்ட தங்க ஆபரணங்களை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து வயோதிப பெண்ணின் சத்தம்கேட்டு அயலவர்கள் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *