அரச வங்கியில் திருட்டு சம்பவம்: பெருந்தொகை தங்கம் களவு!

வென்னப்புவ, வைக்கல அங்கம்பிட்டியவில் உள்ள அரச வங்கி ஒன்றில் தங்கப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த வங்கியில் சுமார் 7 கோடி ரூபா பெறுமதியான தங்கம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 28ஆம் திகதி வங்கியின் கையிருப்பில் இருந்து தங்கமே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

இரவு வேளையில் வங்கிக்குள் பிரவேசித்த சிலர் அங்கிருந்த பெட்டகத்தை உடைத்து தங்கத்தை எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *