மின் கட்டணத்தை மீண்டும் 22 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்!

மின்சார கட்டணத்தை மீண்டும் உயர்த்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, அனைத்து மின்சார நுகர்வோருக்கும் 22% கட்டணத்தை அதிகரிக்க அல்லது ஒரு மின்சார அலகுக்கு அறவிடப்படும் கட்டணத்தை 8 ரூபாவால் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, 4,500 ஜிகாவாட் நீர்மின் திறன் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் 3,750 ஜிகாவாட் மணிநேரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்ததால், நீர்மின்சாரத்தில் இருந்து எதிர்பார்த்த அளவு மின்சாரம் தயாரிக்க முடியாததால், கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. .

மின்கட்டண திருத்த முறையின்படி ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகவும், 2024 ஜனவரியில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டண திருத்தம் ஒக்டோபரில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை தொடர்பில் எதிர்வரும் ஒக்டோபர் 18ஆம் திகதி வரை பொதுமக்களின் கருத்துக்களைக் கோரவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கான கோரிக்கை தொடர்பான தரவுகள் மற்றும் உண்மைகளை இன்று (02) அல்லது நாளை (03) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *