யாழ்.சாவகச்சேரியில் மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி!

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி நுணாவில் ஏ9வீதியில் இடம்பெற்ற விபத்தில் விடுதி உரிமையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரியில் இருந்து நுணாவில் நோக்கிச் பயணித்த பிக்கப் வாகனமும் ஒன்றோடு ஒன்று மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த இச்சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நுணாவில் பகுதியில் விடுதி ஒன்றின் உரிமையாளரான 35 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *