மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயதுடைய காதலன் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 12 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கடந்த வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார்.
இச்சம்பவத்தில் மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள 15 வயதும் 9 மாதம் கொண்ட சிறுமிக்கு ஏற்பட்ட வயிற்றுவலி காரணமாக அவரை அவரது பெற்றோர் வைத்தியசாலையில் சம்பவதினமான 28ம் திகதி வியாழக்கிழமை அனுமதித்தனர்.
இந்நிலையில் ஆரம்ப பரிசோதனை செய்த வைத்தியர்கள் அவர் கர்ப்பம் தரித்துள்ளதாக கண்டறிந்தனர்.
குறித்த சிறுமி அதே பிரதேசத்தைச் சேர்ந்த வாகனங்கள் திருத்தும் நிலையம் ஒன்றில் வேலை செய்துவரும் 18 வயதுடைய காதலன் உடன் ஏற்பட்ட உடலுறவு காரணமாக கர்ப்பமாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த இளைஞனை நேற்று முன் தினம் கைது செய்த பொலிஸார் அவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் அவரை 12ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.