மட்டக்களப்பு கடலில் பெருமளவில் உலவும் ஒருவகை நண்டு அப்பகுதி கடற்றொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நண்டினமானது கடந்த காலங்களில் ஓரிரு நாட்களே இவ்வாறு வருவதாகவும் ஆனால் தற்போது மாதக்கணக்காக கடலில் இருப்பதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நண்டினம் கரை ஒதுங்காமல் கடலின் நடுப்பகுதிகளில் தொடர்ந்தும் காணப்படுவதனால் தங்களது வலைகள் சேதமாக்கப்படுவதாக கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது போன்ற அசௌகரிங்களினால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பொருளாதார ரீதியில் சிக்கல்களை சந்திப்பதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்