45 முதல் 65 வயதுடைய பெண்களுக்கு ஏற்படும் ஆபாய நிலை : வைத்தியர்களின் எச்சரிக்கை!

இலங்கையில் பணி புரியும் பெண்கள் புற்றுநோயால் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்திற்கான சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.

குறிப்பாக 45 முதல் 65 வயது வரையிலான பெண்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பணிபுரியும் பெண்கள் அலட்சியபோக்குடன் மிகக் குறைந்த மட்டத்திலேயே சோதனைக்கு செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் இந்த நிலைமை மேலும் மோசமாகியுள்ளதாகவும் இதுவரை பதிவாகியுள்ள புற்றுநோயாளிகளில் 26 பேர் மார்பகப் புற்றுநோயாளிகளாக இருப்பதாக தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *