அதிகாலையில் துப்பாக்கிச்சூடு சம்பவம்: ஒருவர் படுகாயம்!

அம்பலாங்கொட, மிட்டியகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று(28) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் மிட்டியகொட மாகவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் துப்பாக்கிச் சூட்டில் அவரது ஒரு காலில் தொடை பகுதியில் சுடப்பட்டு காயமடைந்த நிலையில் குறித்த நபரை பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *