தனுஷ்க குணதிலக வழக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த இலங்கை வீரர் எந்தத் தப்பும் செய்யவில்லை என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விலக்கி அவுஸ்திரேலிய சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாரா ஹகெட் இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தார்.

இவ்வழக்கில் தனுஷ்க குணதிலக, டிண்டர் என்ற சமூக ஊடக செயலி மூலம் தான் சந்தித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

அதேவேளை கடந்த 21ஆம் திகதி சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தனுஷ்கவின் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இன்று (28) அதன் தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *