வடக்கு ஈராக்கில் திருமண விழா ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 150 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் மணமகனும், மணமகளும் உள்ளடங்குவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் தீ விபத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், பட்டாசு வெடித்ததே விபத்துக்குக் காரணம் என அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.