வாவியில் மூழ்கி 9 வயது சிறுவன் பலி!

எம்பிலிபிட்டி – சந்திரிகா வாவியில் மூழ்கி ஒன்பது வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் மற்றும் அவரது தாய் உள்ளிட்ட இருவருடன் சந்திரிகா வாவியில் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்போது, பொலிஸ் உயிர்காப்பு உத்தியோகத்தர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.

எனினும், அவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *