யாழில் பரிதாபமாக உயிரிழந்த மூன்று மாத குழந்தை: சோகத்தில் பெற்றோர் !

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் நேற்று முன்தினம் (23.09.2023) பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

கிருஷ்ணகுமார் கரிஹரன் என்ற மூன்று மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

குழந்தையின் தாய் நேற்று முன்தினம் (23.09.2023) காலை குழந்தைக்குப் பாலூட்டிய போது குழந்தை அசைவற்று காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், குழந்தையை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றவேளை, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் பால் புரையேறியே குழந்தை உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *