நுவரெலியா, விஜிதபுர பகுதியில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் விளைவாக மனைவி தாக்கியதில் கணவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றி முன்னிரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் விஜிதபுர பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
வீட்டில் குடிபோதையில் இருந்த கணவர், மனைவி வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்த பிறகு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த கணவர் தனது மனைவியைத் தாக்கியுள்ளதாகவும் பின்னர் கணவனை மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து 32 வயதுடைய சந்தேகநபரான் பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நுவரெலியா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.