எதிர்வரும் காலத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலையை 100 ரூபாவாக குறைக்க எதிர்பார்த்துள்ளதாக ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் ஜயவர்தன இந்த விலை குறைப்பு குறித்து குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு வகையான வரிகள் மற்றும் டொலரின் பெறுமதி காரணமாக பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் ஒரு பாணின் விலையை 100 ரூபா அல்லது அதற்கும் குறைவாகவே பேணுவதே தமது சங்கத்தின் ஒரே நம்பிக்கை. அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் முயற்சியின் கீழ் எதிர்காலத்தில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் 100 ரூபாவிற்கு ஒரு இறாத்தல் பாணை வழங்க ஏற்பாடு செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசாங்கம் தலையிட்டால் நிச்சயமாக 100 ரூபாவிற்கு ஒரு இறாத்தல் பாணை வழங்குவதுடன் ஒரு பணிஸின் விலையில் 10 அல்லது 15 ரூபாவை குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.