குருநாகல் வாகன விபத்தில் இருவர் பலி : மூவர் படுகாயம்!

குருநாகல் தம்புள்ளை பிரதான வீதியின் கலேவெல பெலிகமுவ பிரதேசத்தில் இன்று (24) காலை இடம்பெற்ற விபத்தில் தனியார் பஸ் ஒன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தனியார் பேருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த வேளையில், ஆராச்சிக்கட்டுவ பகுதியில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் கலேவெல பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த பெண் ஒருவரும் மற்றுமொரு ஆண் மற்றும் 6 வயது சிறுவன் ஒருவரும் கலேவெல வைத்தியசாலையில் இருந்து தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *