முல்லைத்தீவு – மல்லாவி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
பூட்டிய வீடொன்றிற்குள் இருந்து நேற்றைய தினம்(23.09.2023) குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய உத்தமன் என்ற நபரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அயலவர்களால் மல்லாவி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாக மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.