மன்னாரில் பெருந்தொகை போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

மன்னார் காவல்துறை பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் நூதனமுறையில் ஓழித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு லட்சத்து எழுபதாயிரம் போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கபெற்ற இரகசிய புலனாய்வு தகவலுக்கு அமைய மன்னார் காவல்துறை குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே தாழ்வுபாடு பகுதியில் ஒழித்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பொதிகளில் சுற்றப்பட்டு ஒழித்து வைக்கப்பட்டிருந்த குறித்த போதை மாத்திரைகளின் தற்போதைய சந்தைமதிப்பு 3 கோடி ரூபாவாகும்.

மேலும், போதை மாத்திரை கடத்தலுடன் தொடர்புபட்ட தாரபுரம் பகுதியை சேர்ந்த 22 வயதான சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *