காலியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் : வர்த்தகர் ஒருவர் பலி!

காலியில் நேற்று (23) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

காலி – டிக்ஷன் வீதியில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் வர்த்தகர் என தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *