சிறைச்சாலையில் இருந்து தப்பியோடிய இரு கைதிகள்!

வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த இரண்டு கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கொலன்னாவ மற்றும் களனி, வனவாசல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய இரு கைதிகளே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர்.

அத்துடன் குறித்த நபர்கள் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *