பாணுக்குள் கிடந்த மர்மபொருள்: அதிர்ச்சியில் உறைந்த பெண்!

மாத்தறை பம்புரனை பிரதேசத்தில் கடை ஒன்றில் பெண் ஒருவர் கொள்வனவு செய்த பாணில் பீடித் துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இரண்டு பாண்களை குறித்த பெண் கொள்வனவு செய்துள்ளார்.
நேற்று காலை பாடசாலைகளுக்கு செல்லும் தனது பிள்ளைகளுக்காக பாண் துண்டு ஒன்றை வெட்டும் போதே அந்த பீடித்துண்டை அவதானித்துள்ளார்.

முதலில் கறிவேப்பிலை என நினைத்து நசுக்கிய போது பீடி என தெரியவந்தது. பின்னர் நன்றாக வெளியே எடுத்து பார்க்கும் போது பீடியின் பெரிய துண்டு என்று உறுதியானது.

இதனால் கடும் அதிருப்தியடைந்த பெண் இது போன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என கருதி சம்பவம் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *