திருகோணமலையில் மீட்கப்பட்ட வெடிகுண்டு!

திருகோணமலை உப்புவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட கன்னியா பகுதியில் மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே நேற்று (22) காலை கன்னியா சுடுதண்ணீர் கிணற்றுக்கு செல்லும் வீதிக்கு அண்மையில் உள்ள காட்டுப் பகுதியில் குறித்த மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற மற்றுமொரு இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது சம்பூர் நவரெட்ணபுரம் காட்டுப் பகுதியில் ரி56 ரக துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *