12 வயது சிறுமி நடந்த கொடூரம்: 68 வயது முதியவர் கைது!

மொனராகலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கும்புக்கன அந்தரமண்டியில் வசிக்கும் 12 வயதுடைய சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 68 வயதுடைய முதியவர் மொனராகலை காவல்துறையினரால் கடந்த (20) ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு முதல் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, ​​வீட்டின் அருகில் வசிக்கும் ஒருவர் வந்து அவ்வப்போது பாலியல் வன்புணர்வு செய்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் 68 வயதுடைய முதியவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவரை மொனராகலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு வன்புர்விற்குள்ளான சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *